/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடும்போது காரில் தீ விபத்து 400 கிலோ புகையிலை சிக்கியது
/
ஓடும்போது காரில் தீ விபத்து 400 கிலோ புகையிலை சிக்கியது
ஓடும்போது காரில் தீ விபத்து 400 கிலோ புகையிலை சிக்கியது
ஓடும்போது காரில் தீ விபத்து 400 கிலோ புகையிலை சிக்கியது
ADDED : நவ 28, 2025 01:00 AM
சேலம், சாலையில் ஓடும்போது காரில் தீப்பற்றி எரிந்ததால், தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்தனர். தொடர்ந்து போலீசார் சோதனை செய்து, 400 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்ததால், காருடன் பறிமுதல் செய்து, தப்பிய இருவரை தேடுகின்றனர்.
சேலம், கந்தம்பட்டி பைபாஸில், 'போக்ஸ்வேகன்' கார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது இன்ஜின் பகுதியில் தீப்பற்றியது. அதை ஓட்டி வந்தவர், அவருடன் வந்தவர், காரை சாலையோரம் நிறுத்தி இறங்கினர். அங்கிருந்த மக்கள், தீயை அணைக்க முயன்றனர். அவர்கள் தகவல்படி சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சூரமங்கலம் போலீசார் விசாரித்தபோது, காரில் இருந்து இறங்கிய இருவரும் ஓட்டம் பிடித்தது தெரிந்தது. காரை சோதனை செய்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அப்பொருட்களுடன் காரை பறிமுதல் செய்தனர். மேலும் மேற்கு வங்க மாநில பதிவெண் கொண்டதாக இருந்தது. விசாரணையில் அதுவும் போலி நம்பர் பிளேட் என தெரிந்தது. காரின் உரிமையாளர், புகையிலை கடத்தி வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

