sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கருவறையில் புகுந்த வாலிபருக்கு 'கவனிப்பு'

/

கருவறையில் புகுந்த வாலிபருக்கு 'கவனிப்பு'

கருவறையில் புகுந்த வாலிபருக்கு 'கவனிப்பு'

கருவறையில் புகுந்த வாலிபருக்கு 'கவனிப்பு'


ADDED : டிச 01, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருவறையில் புகுந்த

வாலிபருக்கு 'கவனிப்பு'

ஆத்துார், டிச. 1-

ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி, திருமண் கரட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை

கட்டுப்பாட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அங்கு நேற்று இரவு, 10:30 மணிக்கு புகுந்த ஒருவர், உண்டியலை உடைத்துள்ளார். ஆனால் முடியாததால் கருவறைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள, 'சிசிடிவி'யை, அறங்காவலர்

முருகேசன், அவரது மொபைல் போனில் பார்த்து மர்ம நபர் இருப்பது குறித்து, தம்மம்பட்டி

போலீசாருக்கு தகவல் அளித்தார். 11:00 மணிக்கு அங்கு சென்ற கோவில் நிர்வாக குழுவினர், மக்கள், அந்த வாலிபரை பிடித்து நன்கு

கவனித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

விசாரணையில் தம்மம்பட்டியை சேர்ந்த தினேஷ், 23, என தெரிந்தது. திருட முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேமராவை பார்த்த உடனே சென்றதால், உண்டியல் பணம், நகைகள் தப்பின.






      Dinamalar
      Follow us