ADDED : மே 02, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:சித்திரை திருவிழாவை ஒட்டி மல்லுார் மாரியம்மன் கோவிலில் நேற்று வண்டி வேடிக்கை நடந்தது. இளம் தென்றல் நண்பர் குழு சார்பில், 7 டிராக்டர்களில் விநாயகர், சிவன், பார்வதி, சமயபுரம் மாரியம்மன், காமாட்சி, மீனாட்சி, வராகி, வள்ளி தெய்வானை முருகன் வேடம் அணிந்த பக்தர்கள், மின்னொளியில் வந்தனர். ஒரு டிராக்டரில் கிராமிய நடனம் ஆடியபடி சென்றனர்.
திருச்சி சாலை, பி.மேட்டூர் சாலை, காமாட்சியம்மன் கோவில், வீரபாண்டி சாலை வழியே, வண்டி வேடிக்கை ஊர்வலம் சென்றது. வழிநெடுக ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

