sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

100 பவுன் கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

/

100 பவுன் கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

100 பவுன் கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

100 பவுன் கேட்டு பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம், காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்னரசி, 25.

இவர், சேலம், கந்தம்பட்டியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கும், அங்கு பணிபுரிந்த, சூரமங்கலத்தை சேர்ந்த மனோஜ் பிரதாப்புக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். தொடர்ந்து, 2023 டிச., 23ல் திருமணம் செய்து கொண்டு பழைய சூரமங்கலத்தில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம், தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அதில் கோபம் அடைந்த மனோஜ்பிரதாப், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பொன்னரசி புகார் கொடுத்தார். அதில் 'மே, 7ல் மனோஜ்பிரதாப், அவரது தந்தை ராஜேந்திரன், தாய் சரஸ்வதி, உற-வினர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணன், பெருமாள் ஆகியோர், என்னை தாக்கி, என் பெற்றோரிடம் வரதட்சணையாக, 100 பவுன் நகைகள், 20 லட்சம் ரூபாய் வாங்கி வருமாறு கூறினர். தவிர ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதுகு-றித்து விசாரித்த போலீசார், மனோஜ்பிரதாப் உள்பட, 6 பேர் மீதும் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us