sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மாவட்டத்தில் வரும் 29ல் தொடக்கம்

/

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மாவட்டத்தில் வரும் 29ல் தொடக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மாவட்டத்தில் வரும் 29ல் தொடக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மாவட்டத்தில் வரும் 29ல் தொடக்கம்


ADDED : டிச 23, 2025 08:12 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் மாவட்டத்தில் வரும், 29ல் தொடங்கி, ஜன., 28 வரை, அனைத்து கால்நடைகளுக்கும், 8வது சுற்று கோமாரி நோய் தடுப்-பூசி போடும் பணி இலவசமாக நடக்கிறது. கோமாரி நோய், இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி, காய்ச்சல், கொப்ப-ளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய். பண்ணையில் சுகா-தாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் கோமாரிநோய் பரவுகிறது.

அதனால், சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைதல், எருது-களின் வேலைத்திறன் பாதிப்பு, கன்றுகள் அதிகம் இறப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளால் கால்நடை வளர்ப்போர் பெரும் இழப்புக்கு ஆளாக நேரிடும்.

இந்த கொடிய நோயை தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம், எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவச-மாக போடப்படுகிறது. எனவே, மாவட்டம் முழுவதும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு, அந்தந்த ஊராட்சி கால்நடை மருந்தக பகுதிகளில், 149 குழுக்கள் மூலம் முன்னதா-கவே விளம்பரம் செய்து, 8 வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பை கால்-நடை வளர்ப்பு விவசாயிகள் தவறாமல் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us