/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மார்ச் 11 முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்க நேரத்தில் மாற்றம்
/
மார்ச் 11 முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்க நேரத்தில் மாற்றம்
மார்ச் 11 முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்க நேரத்தில் மாற்றம்
மார்ச் 11 முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்க நேரத்தில் மாற்றம்
ADDED : பிப் 28, 2024 07:37 AM
சேலம் : கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரயில் இயக்க நேரம், மார்ச், 11 முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரயில் இயக்க நேரம், வியாழன் தவிர்த்து, மார்ச், 11 முதல் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கோவையில் காலை, 5:00க்கு பதில், காலை, 7:25க்கு புறப்படும். திருப்பூருக்கு, 5:36க்கு பதில், 8:03; ஈரோட்டுக்கு, 6:17க்கு பதில், 8:42; சேலத்துக்கு, 7:12க்கு பதில், 9:32; தர்மபுரிக்கு, 8:18க்கு பதில், 10:51; ஓசூருக்கு, 9:48க்கு பதில், மதியம், 12:03க்கும் வந்து செல்லும். காலை, 11:30க்கு பதில் மதியம், 1:50க்கு பெங்களூருவை அடையும்.
மறுமார்க்கத்தில் பெங்களூருவில், 1:40க்கு புறப்பட வேண்டிய ரயில், 2:20க்கு புறப்படும். ஓசூருக்கு, 2:38க்கு பதில், 3:10; தர்மபுரிக்கு, 4:08க்கு பதில், 4:22; சேலத்துக்கு, 5:27க்கு பதில், 5:57; ஈரோட்டுக்கு மாலை, 6:22க்கு பதில், 5:47; திருப்பூருக்கு இரவு, 7:03க்கு பதில், 7:31க்கு வந்து செல்லும். இரவு, 8:00 மணிக்கு பதில், இரவு, 8:45க்கு கோவையை அடையும்.

