நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில், 133வது அமலோற்பவமாதா திரு-விழா, பங்குத்தந்தை ஜோசப் பவுல்ராஜ் தலைமையில், கடந்த நவ., 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று ஆர்.சி.செட்-டிப்பட்டி தொழுநோய் நிவாரண மைய இயக்குனர் விமல் தலை-மையில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
நாளை காலை, சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம், திருவிழா திருப்பலியும், மாலையில்
சேலம் மறை மாவட்ட பேராயர் ராயப்பன் தலைமையில் வேண்டுதல் தேர் திருப்பலி நடக்க உள்ளது. நாளை மறுநாள்
கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.