/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்
/
சிக்கன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்
ADDED : மார் 02, 2026 05:23 AM
ஏற்காடு; முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, ஏற்-காடு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலை-மையில் கட்சியினர், ஏற்காடு டவுனில் இருந்து கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், ஒண்டிக்கடை வழியே மக்களுக்கு இனிப்பு வழங்கி ஊர்வலமாக சென்றனர்.
ஒண்டிக்கடை ரவுண்டானாவில் உள்ள அண்ணா-துரை சிலை அருகே, ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலர் அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அங்கிருந்த மக்களுக்கு, சிக்கன் பிரி-யாணி வழங்கப்பட்டது.அதேபோல் ஆத்துார், மாதா கோவில் பகுதியை சேர்ந்த, தி.மு.க., நகர இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் வேல்முருகன், நகர துணை செயலரான, அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர், ராணிப்பேட்டையில் நேற்று, 750 பேருக்கு, இலவசமாக 'சிக்கன்' பிரியாணி, முட்டை வழங்கினர். தி.மு.க., நகர செயலர்கள் பாலசுப்ரமணியம், ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தாரமங்கலம் ஒன்றியம் சார்பில், செயலர் பால-கிருஷ்ணன் தலைமையில் பாப்பம்
பாடியில் திரண்ட கட்சியினர், பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பில், செயலர் ரத்தினவேல் தலைமையில், அக்ரஹார நாட்டாமங்கலம், அதிகாரிப்பட்டி உள்-ளிட்ட இடங்களில், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தெற்கு ஒன்றியம் சார்பில், செயலர் விஜயகுமார் தலைமையில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்-டது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலர் சக்கர-வர்த்தி தலைமையில், துக்கியாம்
பாளையத்தில் உள்ள
கமலாலயம் குழந்தைகள் காப்பகத்துக்கு பீரோ வழங்கப்பட்டது.

