sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை கடத்தல்: மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

/

குழந்தை கடத்தல்: மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

குழந்தை கடத்தல்: மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு

குழந்தை கடத்தல்: மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு


ADDED : ஜன 24, 2025 04:02 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லி அருகே நடுவலுாரை சேர்ந்த குணாளன் மகன் ராஜீவ், 37. பட்டதாரி. நரசிங்கபுரத்தை சேர்ந்த, நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீராம் மகள் சவுமியா, 26. இவருக்கும், ராஜீவுக்கும், 2020ல் திருமணம் நடந்தது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே கருத்து வேறுபாடால், 2023 முதல், பிரிந்து வாழ்கின்றனர்.

சவுமியாவுடன் குழந்தை உள்ளதால், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று, ராஜீவ் குழந்தையை பார்த்து வந்தார். கடந்த, 11ல் அப்படி வந்த ராஜீவ், குழந்தையை அழைத்துச் சென்று, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது, 'மனைவி சவுமியா, குழந்தையின் பின்புறம் சூடு வைத்துவிட்டார்' என கூறினார்.இதையடுத்து சவுமியா, குழந்தையை கணவர் கடத்திச்சென்றதாக, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதனால் நேற்று, ராஜீவ் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us