ADDED : செப் 13, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க, 4வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
அதில் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்தல்; நீண்டகாலம் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மீது விரைவாக தீர்வு கண்டு ஓய்வூதிய பலன்களை தாமதமின்றி வழங்குதல்; தேர்தல் வாக்குறுதிப்படி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுரவ தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலர் ரவி, மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.