ADDED : செப் 22, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி சார்பில், துாய்மையே சேவை விழிப்புணர்வு, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி, அங்குள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது.
நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால், துாய்மை சேவை, பொது இடங்களில் குப்பை கொட்டுவது தவிர்த்தல் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து துாய்மை குறித்து, 4,500 மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மாணவ, மாணவியர், நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.