sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறங்காவலர் குழுவில் சி.நா.பாளையம் புறக்கணிப்பு தி.மு.க.,வில் இருந்து 10 கிளை செயலர்கள் விலகல்

/

அறங்காவலர் குழுவில் சி.நா.பாளையம் புறக்கணிப்பு தி.மு.க.,வில் இருந்து 10 கிளை செயலர்கள் விலகல்

அறங்காவலர் குழுவில் சி.நா.பாளையம் புறக்கணிப்பு தி.மு.க.,வில் இருந்து 10 கிளை செயலர்கள் விலகல்

அறங்காவலர் குழுவில் சி.நா.பாளையம் புறக்கணிப்பு தி.மு.க.,வில் இருந்து 10 கிளை செயலர்கள் விலகல்


ADDED : மார் 31, 2025 02:03 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில், அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்புக்கு, 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதன் நியமன அறிவிப்பு, ஒரு வாரத்துக்கு முன் வெளியானது. பேளூரில், 4 பேர், குறிச்சியில் ஒருவர் என, 5 பேர் உறுப்பினர்க-ளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சின்னமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை எனக்கூறி, அந்த ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த அங்கமுத்து, மணி, விவேகானந்தன், ராஜி, பாலு, கணபதி, வேலுமணி, குணசேகரன், செந்தில்குமார், சாமி-யப்பன் என, 10 கிளை செயலர்கள், தி.மு.க.,வில் இருந்து வில-குவதாக

தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த ஊராட்சி, 9வது வார்டு கிளை செயலர் செந்-தில்குமார் கூறியதாவது:

தான்தோன்றீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்க-ளாக, பேளூரில், 3 பேர், சின்னமநாயக்கன்பாளையத்தில், 2 பேர், பாரம்பரியமாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

சில ஆண்டுக்கு முன், பேளூரில், 3 பேர், சின்னமநாயக்கன்பா-ளையம், குறிச்சியில் தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர். தற்போது சின்னமநாயக்கன்பாளையத்தில் ஒருவர் கூட நியமிக்கப் பட-வில்லை.

ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், ஊர் பாரம்பரியத்தை விட்-டுக்கொடுத்ததாக மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முறை-யிட்டும் மாவட்ட செயலர், நடவடிக்கை எடுக்காததால், தி.மு.க.,வின் இருந்து விலகுவதாக மக்களிடம் தெரிவித்து, தலைமைக்கும் தகவல் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us