/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரத்திலிருந்து கீழே விழுந்து தென்னை தொழிலாளி பலி
/
மரத்திலிருந்து கீழே விழுந்து தென்னை தொழிலாளி பலி
ADDED : நவ 26, 2024 01:32 AM
மரத்திலிருந்து கீழே விழுந்து
தென்னை தொழிலாளி பலி
ஓமலுார், நவ. 26--
தேங்காய் பறித்த தொழிலாளி, மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
ஓமலுார், பெரியேரிப்பட்டி துண்டுமானியம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 25. தென்னை மரம் ஏறும் தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் நேற்று மதியம், 1:30 மணிக்கு தொளசம்பட்டி சொட்டையனூர் சர்க்கரை என்பவரது தோட்டத்தில், தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால், மயக்க நிலையில் கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். அவரது தந்தை கனகரத்தினம், 60. ஆம்புலனஸ் மூலம் தனது மகனை, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். தொளசம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.