sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேகத்தடையால் திடீர் 'பிரேக்' கல்லுாரி மாணவி உயிரிழப்பு

/

வேகத்தடையால் திடீர் 'பிரேக்' கல்லுாரி மாணவி உயிரிழப்பு

வேகத்தடையால் திடீர் 'பிரேக்' கல்லுாரி மாணவி உயிரிழப்பு

வேகத்தடையால் திடீர் 'பிரேக்' கல்லுாரி மாணவி உயிரிழப்பு


ADDED : மார் 17, 2025 03:52 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: திருவண்ணாமலை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஆறு-முகம் மகள் கவிதா, 21. சென்னையில் உள்ள தனியார் கல்லுா-ரியில், எம்.ஏ., பொது நிர்வாகவியல், 2ம் ஆண்டு படித்தார்.

நண்பர் திருமண விழாவுக்கு சேலம் வந்த அவர், ஏத்தாப்பூர் செல்ல, அவருடன் படிக்கும் சென்னையை சேர்ந்த, தீபக்குமார், 23, என்பவருடன் நேற்று, 'ஜூபிடர்' மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாமல் கவிதா ஓட்டினார். வழி தெரியாமல், காலை, 10:30 மணிக்கு, ஆத்துார், செல்லியம்பாளையம் சென்ற நிலையில், அங்கு வேகத்தடை இருந்ததால் திடீரென, 'பிரேக்' போட்டார். அதில் இருவரும் தடுமாறி விழுந்தனர்.

படுகாயம் அடைந்த கவிதாவை மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்-துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

கொத்தனார் பலி

சேலம், பனமரத்துப்பட்டி அடுத்த, ஜல்லுாத்துப்பட்டியை சேர்ந்-தவர் அஜீத், 23. கொத்தனாரான இவருக்கு திருமணம் ஆக-வில்லை.

நேற்று இரவு, 7:00 மணிக்கு, பனமரத்துப்பட்டியில் இருந்து, 'மேக்ஸ் 100' பைக்கை ஓட்டிக்கொண்டு

ஜல்லுாத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியவில்லை. கட்டபுளிய மரம் பஸ் ஸ்டாப் அருகே எதிரே வந்த சரக்கு வேன் மீது பைக் மோதியது. இதில் அஜீத் உயிரிழந்தார்.

பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us