ADDED : மார் 17, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் ஓராண்டுக்கு முன், விமான கோபுரங்களுக்கு மட்டும் பாலாலயம் செய்யப்பட்டது.
மூலவர் அம்மன் உள்-ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு, நேற்று பாலாலயம் செய்யப்பட்டது.இதனால் மூலவர் காளியம்மன், பாலதண்டாயுதபாணி, பரிவார தெய்வங்களின் உருவங்களை சிறு அளவில் அத்தி மரத்தில் செதுக்கி, அவற்றை வைத்து யாக பூஜை செய்து, மூலவரின் சக்-தியை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, பால பிம்பத்துக்கு ஏற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ஓராண்டில் கும்பாபிே-ஷகம் நடத்த திட்டமிட்டு, திருப்பணி தொடங்கியுள்ளது.