sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெரியார் பல்கலை கழகத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் ஆய்வு

/

பெரியார் பல்கலை கழகத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் ஆய்வு

பெரியார் பல்கலை கழகத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் ஆய்வு

பெரியார் பல்கலை கழகத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் ஆய்வு


ADDED : ஜூலை 18, 2025 02:19 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், சுழற்சி முறையில், துறை தலைவர் மாற்றம் நடைபெறவில்லையா என, ஆய்வுக்கூடத்தில் கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி கேள்வி எழுப்பினார்.

சேலம், பெரியார் பல்கலை கழக நிர்வாகக்குழு தலைவரும், கல்லுாரி கல்வி ஆணையருமான சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ்., நேற்று பெரியார் பல்கலை கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் தலைமையில் தொழிலாளர்கள், 100 பேருடன் சென்று, ஆணையரை சந்தித்து மனுக்களை வழங்கினர்.

பின் பல்கலை கழக துறை தலைவர்கள் மட்டும் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், பல்கலையில் உள்ள பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என, பேராசிரியர்களிடம் சுந்தரவள்ளி தெரிவித்தார். பின் எவ்வளவு நாளாக துறை தலைவர்களாக உள்ளீர்கள் என கேட்ட போது, சிலர் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாக தெரிவித்த போது, இரண்டாண்டுக்கு ஒரு முறை துறை தலைவர் மாற்றம் நடக்க

வில்லையா என கேள்வி

எழுப்பினார். தொடர்ந்து பல்கலை கழகத்தை, சிறப்பாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us