/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜூலைக்குள் ஏரி பணி முடிக்க கமிஷனர் உத்தரவு
/
ஜூலைக்குள் ஏரி பணி முடிக்க கமிஷனர் உத்தரவு
ADDED : ஜூலை 10, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சி போடிநாயக்கன்பட்டி ஏரி, உட்கட்டமைப்பு நிதி, 19 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக துார் வாருதல், நிலத்தடி நீர் சேமிப்பு, களை அகற்றுதல், சுவர் வலுப்படுத்தல், நடைபயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி
அமைத்தல், மரங்கள் நடுதல், இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார்