/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவணத்தை திருடி வெளியிட்டதாக முன்னாள் பதிவாளர் மீது புகார்
/
ஆவணத்தை திருடி வெளியிட்டதாக முன்னாள் பதிவாளர் மீது புகார்
ஆவணத்தை திருடி வெளியிட்டதாக முன்னாள் பதிவாளர் மீது புகார்
ஆவணத்தை திருடி வெளியிட்டதாக முன்னாள் பதிவாளர் மீது புகார்
ADDED : மே 09, 2024 06:47 AM
ஓமலுார் : சேலம் பெரியார் பல்கலை பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன், உயர்கல்வித்துறை அரசு செயலருக்கு நேற்று அனுப்பிய கடிதம்:
பெரியார் பல்கலை மாணவர்கள் சிலர், என் மீது புகார் அளித்தது தொடர்பாக, விரிவான அறிக்கையை, அரசுக்கு உடனே அனுப்பும்படி கோரப்பட்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பொறுப்பு பதிவாளர் தங்கவேல், விசாரணை குழு அமைத்து, 4 அமர்வாக விசாரணை நடந்தது. கடந்த பிப்ரவரியில், தங்கவேல் ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு என் விசாரணை தொடர்பான சில படங்கள், வீடியோவை அனுப்பி வெளியிட வைத்துள்ளார். விசாரணை முடியாத நிலையில் அந்த ஆவணங்கள், வீடியோக்களை பொதுவெளியில் வெளியிட்டு, சமூக ஊடகங்களில் பரப்பிட செய்துள்ளார். அரசு சார்பில் அனுப்பிய ஆவணங்களை திருடி அதை சமூக ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார். இது ஆவண திருட்டு. அதேபோல் பல ஆவணங்கள், மடிக்கணினியில் இருப்பதாகவும், அவ்வப்போது வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் தமிழக அரசு தலையிட்டு அவர் மீது குற்ற வழக்கு பதிந்து, மடிக்கணினி, அவரிடம் உள்ள பல்கலை ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.