sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டுறவு சங்க பணியாளர்கள் நாளை மனுக்கள் வழங்கலாம்

/

கூட்டுறவு சங்க பணியாளர்கள் நாளை மனுக்கள் வழங்கலாம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் நாளை மனுக்கள் வழங்கலாம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் நாளை மனுக்கள் வழங்கலாம்


ADDED : மே 15, 2025 01:27 AM

Google News

ADDED : மே 15, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், தமிழக சட்ட சபையில், கூட்டுறவுத்துறை அமைச்சர், 2024 ஜூன், 27 அன்று, கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் நலன் தொடர்பாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வுகாண, இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், அழகாபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், 5 முறை நடந்த நிகழ்ச்சிகளில், 329 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது, 6வது நிகழ்ச்சி, வரும், 16 காலை, 10:30 மணிக்கு, அதே அழகாபுரம் சமுதாயக்கூடத்தில் நடக்க உள்ளது. இதில் சேலம் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோர், குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள், சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சேலம் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us