/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி
/
புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி
புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி
புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி
ADDED : பிப் 04, 2025 06:42 AM
ஆத்துார்: புகைப்படம் எடுக்கச் சென்றபோது, காதல் மலர்ந்ததால் திரு-மணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அத்தனுாரை சேர்ந்த செங்-கோடன் மகன் பிரகாஷ், 29. இவர் பிளஸ் 2
வரை படித்துவிட்டு, ஸ்டூடியோ வைத்துள்ளார். தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்-சியை சேர்ந்த
செல்வகுமார் மகள் சினேகா, 22. பி.எஸ்.சி., முடித்-துவிட்டு வீட்டில் இருந்தார். சினேகா, சேலம் தனியார் நர்சிங்
கல்-லுாரியில் படித்தபோது, அங்கு புகைப்படம் எடுக்க சென்ற பிரகாஷூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்,
பிரகாஷ் தனது நண்பன் சிகிச்சைக்கு, சேலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு பயிற்சியில் இருந்த சினேகாவுடன், மீண்டும் பழக்கம் ஏற்-பட்டு காதலித்து வந்தனர். இருவீட்டு
பெற்றோரும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஜன., 31ல், வீட்டை விட்டு வெளி-யேறி, நேற்று சேலம்
சித்தர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு-வீட்டு
பெற்றோரையும் அழைத்து, மகளிர் போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். இத்திருமணத்தை சினேகாவின்
பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. காதல் திருமணம் செய்த பிரகாஷூடன் சினேகாவைபோலீசார் அனுப்பி வைத்தனர்.