/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதம் மாறி காதல் திருமணம் ஜோடி போலீசில் தஞ்சம்
/
மதம் மாறி காதல் திருமணம் ஜோடி போலீசில் தஞ்சம்
ADDED : ஜூலை 11, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டைமேடு அருகே முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது அஷ்ரப், 24. விசைத்தறி தொழிலாளி. ஓமலுார், தாத்தியம்பட்டி, செட்டியார் தெருவை சேர்ந்தவர் சந்தியா, 24. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் பள்ளியில் படித்த காலத்திலேயே காதலித்துள்ளனர்.
நேற்று வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பள்ளி வாசலில், முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, ஓமலுார் மகளிர் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், அவர்களது பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தி அனுப்பிவைத்தனர்.

