ADDED : டிச 03, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படகுத்துறையில்
கிரிக்கெட் வீரர்
இடைப்பாடி, டிச. 2-
சேலம் மாவட்டம், பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் படகுத்துறை உள்ளது. அங்கு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குவிந்து, படகில் பயணித்து கொண்டாடுவர். ஆனால் சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று பூலாம்பட்டி படகுத்துறையில் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. இதனிடையே இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நண்பர்களுடன் பூலாம்பட்டி வந்தார். ஆனால் தொடர் மழையால், சிறிது நேரத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார்.