/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சைக்கிள் போலோ போட்டி: அமைச்சர் துவக்கிவைப்பு
/
சைக்கிள் போலோ போட்டி: அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : நவ 10, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைக்கிள் போலோ போட்டி: அமைச்சர் துவக்கிவைப்பு
சேலம், நவ. 10-
தமிழ்நாடு சைக்கிள் போலோ சங்கம் சார்பில், மாநில சைக்கிள் போலோ போட்டி சேலம், சி.எஸ்.ஐ., பள்ளியில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். சேலம் உள்பட, 12 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என, 3 பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி இன்றும் நடக்கிறது. வெற்றி பெறுபவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
துவக்க விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.