ADDED : நவ 28, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: திருச்செங்கோட்டில் கூரியர் சர்வீஸ் நடத்தும் வாலிபரும், அவ-ரது, 24 வயது மனைவியும், திருச்செங்கோட்டில் வசிக்கின்றனர். அந்த பெண், கடந்த, 21ல், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள மாமனார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். 23 அதி-காலை, துாங்கிக்கொண்டிருந்த மருமகளை, அவரது மாமனாரான, 60 வயது
விவசாயி, பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அவர், கணவரிடம் தெரிவித்த நிலையில், அவர் வந்து,
தந்தையை தாக்கி-யுள்ளார். காயம் அடைந்த அவர், அருகே உள்ள தனியார் மருத்து-வமனையில்
அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைத்து, அப்பெண், போலீசில் புகார் கொடுக்க, குடும்பத்தினர்
மறுத்து-விட்டனர். இருப்பினும் நேற்று, அப்பெண் அளித்த புகார்படி, கொங்கணாபுரம் போலீசார், மாமனாரை
கைது செய்தனர்.