sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண் உடலில் பாய்ந்த கத்தி அகற்றம்; மருத்துவ குழுவுக்கு டீன் பாராட்டு

/

பெண் உடலில் பாய்ந்த கத்தி அகற்றம்; மருத்துவ குழுவுக்கு டீன் பாராட்டு

பெண் உடலில் பாய்ந்த கத்தி அகற்றம்; மருத்துவ குழுவுக்கு டீன் பாராட்டு

பெண் உடலில் பாய்ந்த கத்தி அகற்றம்; மருத்துவ குழுவுக்கு டீன் பாராட்டு


ADDED : பிப் 14, 2025 07:06 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : பெண் உடலில் பாய்ந்த கத்தியை அகற்றிய, சேலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ குழுவினரை, டீன் தேவிமீனாள் பாராட்டினார்.

இதுகுறித்து டீன் தேவி மீனாள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 31 வயது பெண்ணுக்கும், அவரது கணவருக்கும், கடந்த, 1ல் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கணவர் கத்தியால் குத்தியுள்ளார். அப்பெண் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளித்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, இடது புற நெஞ்சு பகுதியில் கத்தி ஆழமாக சென்றிருப்பது தெரிந்தது. அறுவை சிகிச்சை செய்து தான் கத்தியை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு, அப்பெண்ணை, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர்.

இங்கு, அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதயத்துக்கும், முக்கியமான ரத்த குழாய்க்கும் மிக அருகே கத்தி இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் மிக கவனமாக, கத்தி வெளியே எடுக்கப்பட்டது. ரத்த கசிவு, நுரையீரல் சரிசெய்யப்பட்டது. தற்போது பெண் நலமுடன் உள்ளார். இந்த சிக்கலான சிகிச்சையை அளித்த இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவ குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பாளர் ராஜ்குமார், துறைத்தலைவர் ராஜராஜன், மருத்துவர்கள் விக்னேஸ்வரன், இளமதி, மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us