/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாக்கப்பட்ட முதியவர் இறப்பு தாய் - மகளுக்கு வலை
/
தாக்கப்பட்ட முதியவர் இறப்பு தாய் - மகளுக்கு வலை
ADDED : ஆக 02, 2025 01:09 AM
சேலம், சேலம், கந்தம்பட்டி கோனேரிக்கரையை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன், 47. செவ்வாய்ப்பேட்டையில் பிரின்டிங் கடையில் பணிபுரிகிறார். கடந்த, 23ல் அதே பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில், வெங்கடேஷ்வரன் குடும்பத்தினர் தண்ணீர் பிடித்தனர். அதேநேரம் அருகே வசிக்கும் உறவினர் மகள் மஞ்சு, மோட்டார் மூலம் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்தார். இதனால் பொது குழாயில் குடிநீர் வரவில்லை.
இதுதொடர்பாக வெங்கடேஷ்வரன் தந்தை காண்டீபன், 71, தட்டிக்கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மஞ்சு, அவரது தந்தை சகாதேவன், 55, தாய் பாப்பாத்தி ஆகியோர், தென்னை மட்டையால் காண்டீபனை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த, 25ல் சகாதேவனை கைது செய்தனர். இந்நிலையில் காண்டீபன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின் கொலை வழக்காக மாற்றி, பாப்பாத்தி, மஞ்சுவை தேடுகின்றனர்.