ADDED : ஆக 05, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
களரம்பட்டி, நேரு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 47.
தறித்தொழிலாளி. இவருக்கு மனைவி தேவி, மகன், மகள் உள்ளனர்.
ராஜ்குமார் குடும்ப செலவுக்கு, வங்கி, தனியார் நிதி நிறுவனத்தில், 4
லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்
வீட்டில், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே
சென்றுவிட்டு வீடு திரும்பிய தேவி அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த
கிச்சிப்பாளையம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். கடனை
சரிவர கட்டாமல் இருந்த வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது,
முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
