sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு சார் - பதிவாளர், 9 பேர் சிக்கினர்

/

போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு சார் - பதிவாளர், 9 பேர் சிக்கினர்

போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு சார் - பதிவாளர், 9 பேர் சிக்கினர்

போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு சார் - பதிவாளர், 9 பேர் சிக்கினர்


ADDED : ஆக 25, 2025 01:49 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: போலி ஆவணம் மூலமாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சார் - பதிவாளர் உட்பட, 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

சேலம் மாவட்டம், மெய்யனுாரை சேர்ந்தவர் பெரியபெருமாள், 73; சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் அளித்த மனு:

இடங்கணசாலையில், தாய் கந்தாயி பெயரில், 13.75 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், 2022ல் மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில், சகோதரரான கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாசலம், தான செட்டில்மென்ட் கிரயம் செய்துள்ளனர். இதற்கு போலியாக இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. சார் - பதிவாளர், துணை தாசில்தார், வி.ஏ.ஓ., உடந்தையாக இருந்துள்ளனர்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

எஸ்.பி., உத்தரவுப்படி, மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரித்ததில், போலி ஆவணம் தயாரித்தது உறுதியானது.

மாணிக்கம், அருணாசலம், உடந்தையாக இருந்த ராஜா, இடங்கணசாலை வி.ஏ.ஓ., கோபால், சங்ககிரி துணை தாசில்தார் ஜெயகுமார், பத்திர எழுத்தர் செந்தில்குமார், சிவக்குமார், பொன்னுசாமி, அப்போதைய மகுடஞ்சாவடி சார் - பதிவாளர் கோவிந்தசாமி உட்பட, 10 பேர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us