ADDED : டிச 26, 2025 04:59 AM
சேலம்:அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை, அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க பிரிவு பொதுக்குழு கூட்டம், நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சி அலுவ-லகத்தில் நேற்று நடந்தது.
தலைவர் தம்பிமூர்த்தி தலைமை வகித்தார்.அதில் மாநகர் மாவட்ட செயலர் பாலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் சுந்தரபாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை முதல்வராக்க உழைத்தல்; ஆட்டோ நல வாரியம் அமைத்தல்; ஆட்டோ, தொழிலாளர் ஓய்வூதியம், 3,000 ரூபாய் வழங்குதல்; தொழி-லாளர் குழந்தைகளுக்கு நலவாரியம் மூலம் கல்வி நிதி வழங்-குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.
தொழிற்சங்க பிரிவு இணை செயலர் புரு ேஷாத்தமன், செயலர் அன்பு, பொருளாளர் இஸ்மாயில், துணைத்தலைவர்கள் உள்-ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள்
பங்கேற்றனர்.

