/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : டிச 27, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து நடுவலுார் ஏரிக்கு, 4 கி.மீ.,ல், நீர் வழி வாய்க்கால் உள்ளது. அதை ஆக்கிரமித்து கட்-டப்பட்டிருந்த, 43 வீடுகள் படிப்படியாக இடித்து அகற்றப்பட்-டன. இறுதியில், 6 பேருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த, 12ல், அந்த வீடுகளின் மின் இணைப்புகளை துண்டித்-தனர். இந்நிலையில் நேற்று, வருவாய், பொதுப்பணித்துறை-யினர், பொக்லைன் மூலம், 5 வீடுகளை இடித்து அகற்றினர். அதில், தி.மு.க., நிர்வாகி சிங்காரத்துக்கு மட்டும், 2026 பிப்ரவரி வரை, நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் அவரது வீடு அகற்றப்படவில்லை.

