/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2025 07:33 AM
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு கலைக்கல்லுாரிகளில், பணிபுரியும் கவுரவ விரிவுரை-யாளர்களுக்கு, யு.ஜி.சி.,
அறிவித்த ஊதியம் மற்றும் பணி நிரந்-தரம் குறித்த, நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வலியுறுத்தி,
நேற்று சேலம் அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையா-ளர்கள் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.இதுகுறித்து, ஒருங்கிணைப்பா-ளர்கள் முத்துநகை, மணிவண்ணன் ஆகியோர்
பேசியதாவது:தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலைக்கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள், 25 ஆயிரம்
ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபு-ரிந்து வருகின்றனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது,
தமி-ழக உயர்கல்வித்துறை மிக குறைந்த சம்பளம் வழங்குகிறது. யு.ஜி.சி., அறிவித்த சம்பளம்
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

