sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : பிப் 07, 2025 04:15 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், குரங்குச்சாவடியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலுடன், ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோவி-லுக்கும் தை திருவிழா நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று, முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவில் வேண்டிக்கொண்ட பக்தர்கள், வெண்ணங்கொடி முனி-யப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு வேண்டுதல் நிறைவேற்றி தந்த மாரியம்மனுக்கு, முனியப்பன் முன்னிலையில் உடலில் அலகு குத்தும் வைபவம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள், பட்டா கத்தி, சூலம், வேல், உள்ளிட்ட-வற்றை கொண்டு முகம், உடல்களில் அலகு குத்திக்கொண்டனர். விமான அலகு உள்ளிட்ட பல்வேறு வாகன அலகு குத்தும் வைப-வமும் நடந்தது. இதையடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவி-லுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்-டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.யானை வாகனத்தில் உலா

அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தைப்பூச தேர்த்-திருவிழா

வின், 4 நாளான நேற்று, புலிக்குத்தி சாவடிக்கு, சுவாமியை அழைத்து வந்தனர். மாலையில் சுவாமிக்கு வாசனை திரவியங்-களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில், யானை வாகனத்தில் எழுந்தருளச்செய்து, முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா நடந்து கோவிலில் நிறைவு செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.






      Dinamalar
      Follow us