/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி
/
டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி
ADDED : நவ 15, 2024 02:23 AM
டிஜிட்டல் பயிர் சாகுபடி
கணக்கெடுப்பு பணி
சேலம், நவ. 15-------
சேலம் மாவட்டத்தில், 'டிஜிட்டல்' பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அப்பணியை, மல்லமூப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாய நிலம், அளவு, நிலத்தின் தன்மை, கடன் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும்படி, டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 609 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த, 9 முதல், 12,48,318 உட்பிரிவுகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதுவரை, 3,22,438 உட்பிரிவுகளில் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. 317 அரசு அலுவலர்கள் உள்பட, 3 வேளாண் கல்லுாரிகளை சேர்ந்த, 1,004 மாணவர்கள் என, 1,321 பேர் வேளாண் துறை அலுவலர்களுடன் இணைந்து, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.