/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி
/
குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி
குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி
குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி
ADDED : பிப் 11, 2025 07:30 AM
சேலம்: சேலம், திருச்சி பிரதான சாலையில், கடந்த மூன்று நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செல்வதால், அப்பகுதி மக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு, மேட்டூர் தொட்டில்பட்டியிலி-ருந்து, தனிக்குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்-படுகிறது. கடந்த சில வாரங்களாக, பல பகுதிகளுக்கு, 10
நாட்க-ளாகியும் குடிநீர் வினியோகம் செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.குறிப்பாக
கடந்த மாதத்தில் குகை பகுதியில், பொதுமக்கள் குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நி-லையில், குகை பகுதியில் திருச்சி பிரதான சாலையில் உள்ள மெயின் குழாய் உடைந்து, கடந்த
மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி, சாலையில் வழிந்து சாக்கடையில் கலக்கிறது.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில், குடிநீர் தேங்கியிருப்பது,
அவ்வழியே செல்வோரை தடுமாற செய்-கிறது. மூன்று நாட்களாகியும் உடைப்பை சரி செய்யாமல்,
மாநக-ராட்சி பணியாளர்கள் அலட்சியம் காட்டி வருவது, அப்பகுதி மக்-களிடையே கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.