sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீவட்டிப்பட்டி கலவர விவகாரம் அ.தி.மு.க.,- பா.ம.க., நிர்வாகிகளுக்கு வலை

/

தீவட்டிப்பட்டி கலவர விவகாரம் அ.தி.மு.க.,- பா.ம.க., நிர்வாகிகளுக்கு வலை

தீவட்டிப்பட்டி கலவர விவகாரம் அ.தி.மு.க.,- பா.ம.க., நிர்வாகிகளுக்கு வலை

தீவட்டிப்பட்டி கலவர விவகாரம் அ.தி.மு.க.,- பா.ம.க., நிர்வாகிகளுக்கு வலை


ADDED : மே 06, 2024 01:58 AM

Google News

ADDED : மே 06, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தீவட்டிப்பட்டி கலவரத்தில் தொடர்புடைய, அ.தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகளை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஒரு பிரிவினர் வழிபட, மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் முதல் கட்டமாக, 28 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தின் போது ஒரு கடை முன், இருசக்கர வாகனத்தில் சில இளைஞர்கள், சிறு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பெட்ரோல் குண்டு தயாரித்த வீடியோ, தற்போது பரவி வருகிறது. இதன் அடிப்படையில் குண்டு வீசியவர்களை, போலீசார் தேடுகின்றனர்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில், ''கலவரத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் அ.தி.மு.க.,வை சேர்ந்த, காடையாம்பட்டி மாணவரணி ஒன்றிய செயலர் விஜயன், மற்றொரு தரப்பில் பா.ம.க.,வை சேர்ந்த காடையாம்பட்டி ஒன்றிய செயலர் வெங்கடேஷ் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் தனிப்படை போலீசார் தேடுகின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us