sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற தி.மு.க., கிளை செயலர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்; சுற்றிவளைத்த போலீஸ்

/

லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற தி.மு.க., கிளை செயலர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்; சுற்றிவளைத்த போலீஸ்

லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற தி.மு.க., கிளை செயலர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்; சுற்றிவளைத்த போலீஸ்

லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற தி.மு.க., கிளை செயலர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்; சுற்றிவளைத்த போலீஸ்


ADDED : அக் 24, 2024 01:30 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற தி.மு.க., கிளை செயலர்

மருத்துவமனையில் இருந்து ஓட்டம்; சுற்றிவளைத்த போலீஸ்

ஆத்துார், அக். 24-

கொசவன்காட்டில் விவசாய நில தடப்பிரச்னையில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற, தி.மு.க., கிளை செயலர், நெஞ்சு வலிப்பதாக மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு போலீசார் சென்றதும், அவர் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் காமராஜர் சாலையில் அவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, கொசவன்காட்டை சேர்ந்தவர் சுப்ரமணியன், 45. தி.மு.க., கிளை செயலர். அதே பகுதியை சேர்ந்த, அங்கமுத்து மகன் முருகன், 24. லாரி டிரைவர். இவருக்கும் சுப்ரமணியனுக்கும் இடையே, விவசாய நிலத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இதுதொடர்பாக கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று காலை, 9:30 மணிக்கு, 'ேஹாண்டா' பைக்கில் முருகன், அவரது விவசாய தோட்டம் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது சுப்ரமணியன் வழிமறித்து தாக்கியதோடு, அரிவாளால் தலை, கால் பகுதியில் வெட்டினார். அதில் முருகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். போலீசார், முருகனின் உடலை எடுக்கச்சென்றனர். அப்போது அவரது உறவினர்கள், உடலை எடுக்க விடாமல் வாக்குவாதம் செய்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்திய பின் உடலை எடுக்க அனுமதித்தனர்.

இருப்பினும் மதியம், 3:00 மணிக்கு கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொலை செய்த சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், 4:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். பின், சுப்ரமணியன் மீது கொலை வழக்கு பதிந்தனர்.

இதனிடையே காலை, 10:00 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி சுப்ரமணியன், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதை அறிந்து போலீசார் அங்கு வந்தபோது, அவர் தப்பி ஓடிவிட்டார். அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். பின் ஆத்துார், காமராஜர் சாலையில் சென்றுகொண்டிருந்த சுப்ரமணியனை, போலீசார் சுற்றிவளைத்தனர். அவரிடம் கொலை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us