sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறைவனை ஆட்கொள்ள தொண்டு செய்! சைவ சமய பெரு விழாவில் தகவல்

/

இறைவனை ஆட்கொள்ள தொண்டு செய்! சைவ சமய பெரு விழாவில் தகவல்

இறைவனை ஆட்கொள்ள தொண்டு செய்! சைவ சமய பெரு விழாவில் தகவல்

இறைவனை ஆட்கொள்ள தொண்டு செய்! சைவ சமய பெரு விழாவில் தகவல்


ADDED : டிச 09, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், சைவ சமய பெருவிழா, சேலம், சண்முகா மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. அதில் ஜெயலட்சுமி, பிரியதர்ஷினி குத்துவிளக்கு ஏற்றினர். திருக்கூட்டத்தின் சேலம் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் வரவேற்றார். மாநில தலைமை ஆலோசகர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

அதில், 'இந்த மாதவர் கூட்டம்' தலைப்பில் சிவக்குமார் பேசுகையில், ''சிவத்தொண்டு செய்வது தான், இறைவனை ஆட்கொள்ளும் முதல்படி நிலை. அப்போது தான், சிவனுக்கு பூஜை செய்ய முடியும். பூஜை செய்வதற்கான பாக்கியமும் கிடைக்கும். தீட்சை பெற்றால் மட்டும் போதாது. அடியவர்களின் அடியவனாகவும் இருக்க வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, 'அடியவர்க்கு அடியன் ஆவேன்' தலைப்பில், பவானி சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தியாகராஜன் பேசினார். அதேபோல், திருக்கூட்டத்தின் மாநில தலைமை இணை ஆலோசகர் தங்கத்துரை சுவாமி, தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு பேசினர். இதில், மாவட்ட தலைமை ஆலோசகர் சரவணன், சண்முகா மருத்துவ குழும தலைவர் பன்னீர்செல்வம், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us