sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கருக்கலைப்பு முயற்சியில் சிறுமி இறப்பு மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

/

கருக்கலைப்பு முயற்சியில் சிறுமி இறப்பு மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கருக்கலைப்பு முயற்சியில் சிறுமி இறப்பு மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கருக்கலைப்பு முயற்சியில் சிறுமி இறப்பு மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


ADDED : அக் 29, 2024 07:18 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இந்திரா நகரை சேர்ந்-தவர் ஐஸ்வர்யா, 17. திருமணமாகாத இவர் ஏழு மாத கர்ப்பமான நிலையில், 2023 ஏப்., 6ல், வாழப்பாடி தனியார் மருத்துவம-னையில் கருக்கலைப்புக்கு சென்றார்.

ஆனால், குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சிசு இறந்ததாக குப்பை தொட்-டியில் மருத்துவர்கள் போட்டுள்ளனர். அதேபோல், சிறுமி ஐஸ்வர்யாவின் உடல்நிலை மோசமானதால், வேறு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிறுமியை உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த

மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக கூறினர். வாழப்பாடி போலீசார், தனியார் மருத்துவம-னையில் விசாரித்தனர். அப்போது, குப்பை தொட்டியில் கிடந்த பெண் சிசு, மூச்சு திணறியபடி உயிருடன் இருந்துள்ளது.

உடனடி-யாக சிசுவை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, வாழப்பாடி அரசு மருத்துவமனை முன்னாள் முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி புகார்படி, வாழப்-பாடி போலீசார் விசாரித்தனர். அதேபோல் கடந்த, 8ல் சேலம் குடும்ப நலத்துறை துணை இயக்குனர்

உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும், பரவாயில்லை என சிகிச்சை அளித்தல், மருத்துவ குறிப்பு முறையாக பின்பற்றாமல் இருத்தல், சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்தல்

உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மருத்துவர் செல்வம்பாளை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, நேற்று வாழப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசார-ணைக்கு வந்தது. சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு முயற்சி செய்து, சிறுமி இறந்த விவகாரத்தில்,

தனியார் மருத்துவமனை மருத்துவர் செல்வம்பாளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சன்மதி தீர்ப்ப-ளித்தார்.






      Dinamalar
      Follow us