ADDED : நவ 28, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், காந்தி நகரை சேர்ந்த டாக்டர் விஸ்வநாதன். இவரது மனைவி பத்மினி, 66. 'இன்னர்வீல்' சங்க மகளிர், முன்னாள் தலைவியான இவர், நேற்று காலை, 11:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த, கலா, 38, என்பவருடன், நரசிங்கபுரம், திருநாவுக்கரசு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே பைக்கில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், பத்மினி அணிந்திருந்த, 9 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு, பைக்கில் வேகமாக சென்று விட்டார். இதில், பத்மினியின் இடதுபுற கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது; தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் டவுன் போலீசார், செயின் பறித்த மர்ம நபரை தேடுகின்றனர்.