sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டாக்டர் மனைவியிடம் செயின் பறிப்பு

/

டாக்டர் மனைவியிடம் செயின் பறிப்பு

டாக்டர் மனைவியிடம் செயின் பறிப்பு

டாக்டர் மனைவியிடம் செயின் பறிப்பு


ADDED : நவ 28, 2024 03:05 AM

Google News

ADDED : நவ 28, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், காந்தி நகரை சேர்ந்த டாக்டர் விஸ்வநாதன். இவரது மனைவி பத்மினி, 66. 'இன்னர்வீல்' சங்க மகளிர், முன்னாள் தலைவியான இவர், நேற்று காலை, 11:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த, கலா, 38, என்பவருடன், நரசிங்கபுரம், திருநாவுக்கரசு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே பைக்கில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், பத்மினி அணிந்திருந்த, 9 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு, பைக்கில் வேகமாக சென்று விட்டார். இதில், பத்மினியின் இடதுபுற கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது; தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் டவுன் போலீசார், செயின் பறித்த மர்ம நபரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us