sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது நடவடிக்கை கோரி தர்ணா

/

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது நடவடிக்கை கோரி தர்ணா

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது நடவடிக்கை கோரி தர்ணா

கர்ப்பிணி சாவில் சந்தேகம்; கணவர், மாமியார் மீது நடவடிக்கை கோரி தர்ணா


ADDED : ஜூலை 10, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கர்ப்பிணி சாவில் சந்தேகம் உள்ளதால், அவரது பெற்றோர், தர்ணாவில் ஈடுபட்டு, கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சின்னபுனல்வாசலை சேர்ந்த, அழகுவேல் மகன் பிரதீஷ்குமார், 30.

பெங்களூருவில் கணினி இன்ஜினியராக பணிபுரிகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த வேலுவின் மகள் கவியரசி, 24. இவர்களுக்கு கடந்த ஜனவரியில் திருமணமானது. கவியரசி, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்ட நிலையில், கவியரசி வீட்டின் அறையை உட்புறம் தாழிட்டுக்கொண்டு இருந்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், ஜன்னல் வழியே பார்த்தபோது கவியரசி துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். கதவை உடைத்து கவியரசி உடலை மீட்டனர்.இதையறிந்த கவியரசியின் பெற்றோர், 'மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். மகள் சாவில் சந்தேகம் உள்ளது' என கூறி, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். தொடர்ந்து போலீசார், அவரது உடலை, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு மாலை, 4:00 மணிக்கு, கணவர், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவியரசியின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். பின், 'சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் உறுதி அளித்ததால் தர்ணாவை கைவிட்டனர். 6:00 மணிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். பின் கெங்கவல்லி போலீசார் பரிந்துரைப்படி ஆத்துார் ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதன்(பொ) விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us