/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்
/
'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்
'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்
'கேப்'பில் காசு கொடுத்தால் மது! சட்டவிரோத விற்பனை படுஜோர்
ADDED : ஜூலை 25, 2024 01:08 AM
வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர் பிரிவு சாலை அருகே டாஸ்மாக் கடை உள்-ளது.
அதற்கு பக்கத்திலேயே, கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிறு இடைவெளி ஏற்படுத்தி, சட்டவிரோதமாக மதுபா-னங்கள் விற்கப்படுகின்றன. அங்கு, ஏராளமான குடிமகன்கள், காலை, 6:00 மணி முதலே வந்து, மதுபாட்டில்களை வாங்கி செல்-கின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்-களில் பரவி வருகின்றன.அதேபோல் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி, அங்குள்ள மயானம் அருகே, குறிச்சி, சோமம்பட்டி பகுதி-களிலும் சட்டவிரோத முறையில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. திறந்தவெளியிலும், மக்கள் கூடும் பகுதிகளில் மொபட்டில் வைத்தும் விற்பனை ஜோராக நடக்கிறது. பாட்டி-லுக்கு ரகத்தை பொறுத்து, 50 முதல், 100 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து புகார் கொடுத்-தாலும், வாழப்பாடி போலீசார், கண்டும், காணாமல் உள்ளனர். அதனால் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, சேலம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.