ADDED : செப் 21, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஓமலுார் அருகே பச்சனம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40. சேலம், 3 ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் டிரைவராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து, இரவு, 10:00 மணிக்கு, 'ஹோண்டா' பைக்கில் புறப்பட்டார். சேலம், 5 ரோடு அருகே சென்றபோது, அந்த வழியே சென்ற ஆட்டோ, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் துாக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். பள்ளப்பட்டி
போலீசார், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார். பள்ளப்பட்டி போலீசார், விபத்து
ஏற்படுத்திய ஆட்டோ குறித்து விசாரிக்கின்றனர்.