sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் நிலத்தில் சுற்றுலா வாகனம் நிறுத்த எதிர்ப்பு; அ.தி.மு.க., பிரமுகர் மீது டிரைவர்கள் குற்றச்சாட்டு

/

கோவில் நிலத்தில் சுற்றுலா வாகனம் நிறுத்த எதிர்ப்பு; அ.தி.மு.க., பிரமுகர் மீது டிரைவர்கள் குற்றச்சாட்டு

கோவில் நிலத்தில் சுற்றுலா வாகனம் நிறுத்த எதிர்ப்பு; அ.தி.மு.க., பிரமுகர் மீது டிரைவர்கள் குற்றச்சாட்டு

கோவில் நிலத்தில் சுற்றுலா வாகனம் நிறுத்த எதிர்ப்பு; அ.தி.மு.க., பிரமுகர் மீது டிரைவர்கள் குற்றச்சாட்டு


ADDED : பிப் 19, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 19, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கைலாசநாதர் கோவில் நிலத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்த, அ.தி.மு.க., பிரமுகர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அதன் டிரைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தாரமங்கலம் நகர சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் நல சங்க நிர்வாகி ராஜ்குமார் தலைமையில் பலர், நேற்று, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்ந்து ராஜ்குமார் கூறியதாவது: தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள காலி இடத்தில், 60 ஆண்டாக சுற்றுலா வாகனங்களை நிறுத்தி தொழில் செய்தோம். கடந்த, 16ல், கோவில் நிர்வாக உறுப்பினர்கள் சிலர் துாண்டுதலால், அ.தி.மு.க., பிரமுகர் ஜெய்குமார் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், சங்க அலுவலக குடிசை கட்டடத்தை சேதப்படுத்தி, அங்கு கல் ஒன்றை வைத்துவிட்டனர். இதுகுறித்து கேட்டதற்கு, 'இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. இங்கு வாகனங்கள் நிறுத்தக்கூடாது' என மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தாரமங்கலம் ஸ்டேஷனில் புகார் அளித்தால் நடவடிகை எடுக்கவில்லை. இதனால், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். போலீசார் விசாரித்து, அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதித்து, ஜெய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். இதுகுறித்து அ.தி.மு.க., பிரமுகர் ஜெய்குமார் கூறுகையில், ''கடந்த, 16ல் கோவில் தெப்பத்தேர் வைபவம் நடந்தது. அதற்கு தான் அந்த இடத்தை காலி செய்தோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது புகார் தெரிவித்துள்ளனர். அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அவர்கள் வாகனம் நிறுத்த, கோவில் நிர்வாகித்திடம் அனுமதி பெற்று நிறுத்திக்கொள்ளலாம். எனக்கும் நிலத்துக்கும் சம்பந்தம் இல்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us