/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விதிமீறிய 165 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
/
விதிமீறிய 165 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
ADDED : நவ 19, 2024 01:38 AM
சேலம், நவ. 19-
சேலம் மண்டல போக்குவரத்துத்
துறை கட்டுப்பாட்டில், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர் மற்றும் தர்மபுரியில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூரில் பகுதிநேர அலுவலகமும் செயல்படுகின்றன. இந்த, 11 அலுவலக பகுதிகளில், கடந்த அக்டோபரில் வட்டார போக்கு
வரத்து அலுவலர் தலைமையில் குழுவினர், 5,408 வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் சாலைவிதி மீறியவர்களில், 165 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அதில் அதிகபட்சமாக மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய, 49 பேர், சிக்னலை தாண்டிய, 42 பேர், அதிவேகத்தில் சென்ற, 42 பேர், அதிக பயணிகளை ஏற்றிய, 23 பேர், போதையில் வாகனம் ஒட்டிய, 7 பேர் உள்ளிட்டவை அடங்கும். மேலும், முகப்பு விளக்கை அதிக வெளிச்சத்துடன் ஒளிரவிட்டது, சீட் பெல்ட் அணியாதது, அதிக சத்தத்தை எழுப்பிய ஏர்ஹாரன், ெஹல்மெட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறிந்து, 41.76 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், 13.75 லட்ச ரூபாய் உடனடியாக வசூலிக்கப்பட்டன. தவிர, 19.51 லட்ச ரூபாய் சாலைவரி வசூலானது. மேலும் தகுதிச்சான்று (எப்.சி.,), அனுமதிசீட்டு (பர்மிட்) இல்லாத 123 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக போக்குவரத்து
அதிகாரிகள் தெரிவித்தனர்.