/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்ஸ் ரயில்களில் போதை பொருள் கடத்தலா? போலீசார் சோதணை
/
கூட்ஸ் ரயில்களில் போதை பொருள் கடத்தலா? போலீசார் சோதணை
கூட்ஸ் ரயில்களில் போதை பொருள் கடத்தலா? போலீசார் சோதணை
கூட்ஸ் ரயில்களில் போதை பொருள் கடத்தலா? போலீசார் சோதணை
ADDED : அக் 01, 2024 07:13 AM
சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தர-வின்படி, செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள கூட்ஸ் குடோன், அலுவலகம், தொழிலாளர்களிடம் டவுன் உதவி கமிஷனர் ஹரி-சங்கரி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரகலா, தேவராஜ், கலைவாணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட போலீசார் சோத-னையில் ஈடுபட்டனர்.
அப்போது, கூட்ஸ் ரயில்களில் போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா, கூட்ஸ் அலுவலகத்தில் உள்ள சரக்கு மூட்-டைகள், மூட்டை துாக்கும் தொழிலாளர்கள், அவர்கள் பயன்ப-டுத்தும் ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து லாரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள லாரிகளிலும் சோதனை நடந்தது. சோதனையில் எதுவும் கைப்பற்-றப்படவில்லை.