/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டை பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐ.ஐ.டி.,- - ஜெர்மனி பல்கலை ஒப்பந்தம்
/
இரட்டை பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐ.ஐ.டி.,- - ஜெர்மனி பல்கலை ஒப்பந்தம்
இரட்டை பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐ.ஐ.டி.,- - ஜெர்மனி பல்கலை ஒப்பந்தம்
இரட்டை பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐ.ஐ.டி.,- - ஜெர்மனி பல்கலை ஒப்பந்தம்
ADDED : அக் 26, 2024 08:04 AM
புதுடில்லி: ஐரோப்பிய நாடான ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக டில்லி வந்துள்ளார். நேற்று நடந்த, இந்தியா ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான 7வது ஆலோ-சனைக் கூட்டத்தில்
இருதலைவர்களும் பங்கேற்று பேசினர்.
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: பசுமை மற்றும் நிலை-யான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த உறவை மேலும் முன்னோக்கி எடுத்து
செல்ல, பசுமை நகர்ப்புற போக்கு-வரத்து கூட்டாண்மையின் இரண்டாம் கட்டத்தை முன்னேடுக்க ஒப்புக் கொண்டுள்ளோம். 20-ம் நுாற்றாண்டில் நிறுவப்பட்ட உல-களாவிய மன்றங்கள், 21-ம் நுாற்றாண்டின் சவால்களை
எதிர்-கொள்ள போதுமானதாக இல்லை. எனவே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் தேவை என்-பதை ஒலாப் ஸ்கால்சும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா ஜெர்மனி உறவில், மக்களுக்கு இடையிலான நல்லுறவு முக்கிய துாணாக உள்ளது. எனவே திறன் மேம்பாடு, தொழிற்கல்-வியில் இணைந்து செயல்படுவது என இன்று முடிவெடுக்கப்பட்-டுள்ளது.
இருநாட்டு மாணவர்களின் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்தை ஊக்குவிக்க, சென்னை ஐ.ஐ.டி., ஜெர்மனியின் டிரெஸ்டென் பல்-கலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தி-யாவின் இளம் திறமைகள் ஜெர்மனியின்
வளர்ச்சிக்கும் முன்-னேற்றத்திற்கும் பங்களிக்கிறது. இந்தியாவுக்காக ஜெர்மனி வெளி-யிட்டுள்ள திறன் படைத்த தொழிலாளர்களுக்கான திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஜெர்மனியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு தருவதற்கான
சிறந்த வாய்ப்புகளை எங்கள் இளைஞர்கள் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.
கையெழுத்து
இந்த சந்திப்பின் போது மொத்தம், 18 ஒப்பந்தங்கள் கையெழுத்-தாகின. அதில், குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும்
வகைப்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம், பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. -----------