/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று மாணவர்களுக்கு கல்வி கடன் மேளா
/
இன்று மாணவர்களுக்கு கல்வி கடன் மேளா
ADDED : அக் 03, 2024 06:42 AM
சேலம் : இன்று அம்மாபேட்டையில் மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் மேளா நடக்கிறது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில், கல்வி கடன் மேளா, அக்., 3(இன்று) காலை, 9:00 முதல், 5:00 மணி வரை நடக்கிறது. இதில் கல்வி கடன் தேவைப்படும், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
அதேபோல் ஏற்கனவே வங்கிகளில் கல்வி கடன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்கள், புதிதாக கல்வி கடன் பெற விரும்புவோர் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு முடித்தோர் டிப்ளமா, ஐ.டி.ஐ., படிக்கவும், பிளஸ் 2 முடித்தோர் பட்டப்படிப்பு படிக்கவும், கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக்கொண்டிருப்பவர், முதுநிலை கல்வி படித்துக்கொண்டிருப்பவர் கல்வி கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ், ரேஷன், ஆதார், பான் கார்டு, ஜாதி, வருமான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல்கள், கல்வி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்றிதழ், வித்யாலஷ்மி, ஜன்சமார்த் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தால் அதன் விண்ணப்ப நகல், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை, கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க கொண்டு வரவேண்டும்.