ADDED : ஆக 06, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'
சேலம், சேலம், முருங்கப்பட்டி, பெத்தாம்பட்டி, மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 65. இவர் கடந்த, 29ல் சிவதாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த டி.வி.எஸ்., பைக், அவர் மீது மோதியது.
படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.