ADDED : நவ 15, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், நரசோதிப்பட்டி, ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி, 74. வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் சேகர், 50. இருவரும் நேற்று முன்தினம் இரவு வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே, சாலையை கடக்க முயன்றனர். அப்போது வந்த பைக் மோதி, இருவரும் காயம் அடைந்தனர்.
அவர்களை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு முனுசாமி உயிரிழந்தார்.சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

