sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை தடுப்பில் கார் மோதி முதியவர் பலி

/

சாலை தடுப்பில் கார் மோதி முதியவர் பலி

சாலை தடுப்பில் கார் மோதி முதியவர் பலி

சாலை தடுப்பில் கார் மோதி முதியவர் பலி


ADDED : மே 09, 2025 02:47 AM

Google News

ADDED : மே 09, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்,நாமக்கல், மலையாண்டி தெருவை சேர்ந்தவர் பிரபாகர், 61. இவரது மனைவி இந்திரா, 55. சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரபாகரை அழைத்துக்கொண்டு, நேற்று அதிகாலை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இந்திரா புறப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த, டிரைவர் முருகன், 45, 'பஞ்ச்' காரை ஓட்டினார். அதிகாலை, 3:30 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்றபோது, சாலையோர தடுப்பில், கார் மோதியது. இதில் பிரபாகர், இந்திரா, முருகன் படுகாயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரபாகர் உயிரிழந்தார்.

இந்திரா மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

நிதி நிறுவன ஊழியர்

கடலுார் மாவட்டம் திட்டக்குடி அருகே கிளமங்கலத்தை சேர்ந்த, ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார், 27. ஆத்துாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கலெக்ஷன் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ஆத்துாரில் இருந்து நடுவலுார் வழியே, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்புறம் சென்ற 'காஸ்' டேங்கர் லாரி மீது பைக் மோதியது. இதில் ரஞ்சித்குமார் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், லாரியை விட்டு தப்பிய டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us